மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஒன்றிய பாஜக அரசுகளின் கார்ப்பரேட் சார்பு மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் (AIKS) சார்பில் கொல்கத்தாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் டாக்டர் விஜூ கிருஷ்ணன், துணை பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா, மேற்கு வங்க தலைவர்கள் அமல் ஹல்தார், பிப்ளப் மஜும்தார் உள்ளிட்டோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.